16 Jul 2020

மட்டக்களப்பில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக முறைப்பாடுகள் 90 ஆக அதிகரிப்பு.

SHARE
மட்டக்களப்பில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக முறைப்பாடுகள் 90 ஆக அதிகரிப்பு.
பொதுத் தேர்தல் 2020 நடைபெறுவதற்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகத்திற்கு இதுவரை 90 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதனடிப்படையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 22 முறைப்பாடுகளும், மட்டக்களப்பு, வாழைச்சேனை, காத்தான்குடி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தலா 20 முறைப்பாடுகளும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 3 முறைப்பாடுகளும், வாகரை பொலிஸ் பிரிவில் 2 முறைப்பாடுகளும், வவுணதீவு மற்றும் மங்களகம பொலிஸ் பிரிவுகளில் தலா ஒரு முறைப்பாடும் பொதுவாக 1 முறைப்பாடுமாக மொத்தம் 90 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

இவற்றில் சட்டவிரோத பதாதைகள், சுவரொட்டிகள் தொடர்பாக 37 முறைப்பாடுகளும், அரச ஊழிளர்கள் அரசியலில் ஈடுபட்டமை தொடர்பாக 15 முறைப்பாடுகளும், அன்பளிப்பு வழங்கள் தொர்பாக 13 முறைப்பாடுகளும், கூட்டம் மற்றும் ஊர்வலங்கள் தொடர்பாக 12 முறைப்பாடுகளும், அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பாக 6 முறைப்பாடுகளும், நியமனங்கள் மற்றும் இடமாற்றம் தொடர்பாக 3 முறைப்பாடுகளும், சொல் அச்சுறுத்தல் செய்தமை, தாக்குதல் செய்தமை, பொய்ப்பிரச்சாரம் செய்தமை, அஞ்சல் வாக்கு தொடர்பாக, சட்டவிரோத நிகழ்வு ஏற்பாடு செய்தமை, வாக்காளர் உபசரிப்பு போன்றவை தொடர்பாக தலா ஒவ்வொரு  முறைப்பாடுகளுமாக 90 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இம்முறைப்பாடுகளில் தேர்தல் சட்டவிதி மீறல் தொடர்பாக 88 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றில் 87 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய 3 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: