பட்டப்பகலில் ஆடுகளைத் மடக்கிப் பிடிக்கும் முதலை.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட வேத்துச்சேனைப் பகுதியில் வாய்க்கால் ஓரங்களில் மேயும் ஆடுகளை வாய்க்கால்களில் பதுங்கியிருக்கும் முதலைகள் மிகவும் சூட்சுமான முறையில் வேட்டையாடி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றர்.
தமது வாழ்வாதாரத்திற்காக வேண்டி தாம் ஆடுகளை வளர்த்து வரும் இந்நிலையில் தினமும் தமது ஆடுகள் முதலைகளுக்கு இரையாகி வருவதாகவும் இதனால் தமது வாழ்தாதாரம் பாதிப்படைந்து கொண்டு செல்வதாகவும் அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இவ்வறான சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (07) வேத்துச்சேனைக் கிராமத்தில் தமது ஆடுகளை மேத்திருந்தவரின் கண்முன்னே நடந்தேறியுள்ளது.
ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருக்கும்போதே வாய்க்காலில் இருந்த முதலை ஒன்று சுமார் 20000 ரூபா பெறுமதியான ஆட்டை மடக்கிப் பிடித்துள்ளதாக அதன் அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment