14 Jun 2020

மட்டக்களப்பில் தமிழ் அரசுக் கட்சி கூட்டம்.

SHARE
மட்டக்களப்பில் தமிழ் அரசுக் கட்சி கூட்டம்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சிக் கிளைகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் சனிக்கிழமை (13) மாலை மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள  கட்சிப் பணிமனையில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான கி.துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரோஸ்ட உபதலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், மாநகர முதல்வர் தி.சரவணபவான், உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உள்ளுராட்சி உறுப்பினர்கள், வேட்பாளர்களான மா.உதயகுமார், இரா.சாணக்கியன், கிளைகளின் பிரதிநிதிகள், வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், வாலிபர் முன்னணி மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் லோ.தீபாகரன் உட்பட வாலிபர் முன்னணியினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வேட்பாளர்களின் செயற்திட்டங்கள், கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களின் கருத்துக்களும் பரிமாறப்பட்டன.









SHARE

Author: verified_user

0 Comments: