14 May 2020

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை.ஊடகவியலாளன் மரணிக்கும் போது அவன் சார்ந்த சமூகத்தின் குரலும் மறைந்துவிடுகிறது. அந்த வகையில் மிதுன் சங்கரின் மறைவு கிழக்கு மாகாண ஊடகத்துறை வரலாற்றில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மண் மற்றுமொரு ஊடகவியலாளரை இழந்து தவிக்கிறது. கிழக்கின் திறமைமிக்க ஊடகவியலாளராகவும் ,செய்தி ஆசிரியராகவும் பதவி வகித்து மும்மொழிகளிலும் செய்திகளை வழங்கி வந்த இரகுநாதன் மிதுன்சங்கர் என்ற இளம் ஊடகவியலாளரை கிழக்கு மண் இழந்து நிற்கிறது.

ஊடகத்துறை வரலாற்றில் காலத்துக்கு காலம் நாம் பல ஊடகவியலாளர்களை  பலிகொடுத்திருக்கிறோம்.  ஒரு ஊடகவியலாளரின் இழப்பு என்பது ஒரு சமூகத்தின் மறைவுக்கு சமமானது. ஒரு ஊடகவியலாளன் மரணிக்கும் போது அவன் சார்ந்த சமூகத்தின் குரலும் மறைந்துவிடுகிறது. அந்த வகையில் மிதுன் சங்கரின் மறைவு கிழக்கு மாகாண ஊடகத்துறை வரலாற்றில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஊடகவியலாளர்கள் தங்களது பாதுகாப்பு குறித்தும் பாதுகாப்பான பயணங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இனியும் இவ்வாறான இழப்புகளை ஊடகத்துறை சந்திக்க கூடாது.

ஊடகவியளாலர் மிதுன்சங்கர் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடை இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
SHARE

Author: verified_user

0 Comments: