18 May 2020

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தற்காலிக ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள்.

SHARE
.(குணா)

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தற்காலிக ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள்.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் பணி புரியும் தற்காலிக ஊழியர்களின் சேவையை பாராட்டி “Voluntary Organisation for Vulnerable Community Development (VOVCOD) நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு”  என்ற அரசு சார்பற்ற நிறுவனம் ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகளை இன்று திங்கட்கிழமை (18) வழங்கினார்கள். மேலும் ஏனைய நிரந்தர சுகாதார  ஊழியர்களுக்கு அடுத்த கடடமாக உலர் உணவுப் பொதிகளை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில் சபையின் பிரதான மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது VOVCOD சார்பில் தர்மலிங்கம் கணேஷ் ஆஸ்திரேலியாவை சேர்ந்த  செல்வராஜா மற்றும்   
ச.நடேசலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  















SHARE

Author: verified_user

0 Comments: