6 May 2020

போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் 27 வது சபை அமர்வு.

SHARE
போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் 27 வது சபை அமர்வு.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் 27 வது சபை அமர்வு புதன்கிழமை (06) வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மட்டபத்தில் நடைபெற்றது.

சபையின் தவிசாளர் யோகநாதன் ரஜனி தலைமையில் நடைபெற்ற இச்சபை அமர்பில் பிரதித் தவிசாளர் நா.தருமலிங்கம், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது கடந்த காலத்தில் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், கிராமங்களின் உள் வீதிகள் புணரமைப்பு, வீதி மின் விளக்குகளைப் பொருத்துதல், தற்போயை வரட்சி காலத்தில் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற குடிநீர் வினியோகம், கொரோனா நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வேண்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கிருமிநாசினி விசிறும் செயற்பாடுகள்,பொது மாயானங்கள், விளையாட்டு மைதானங்கள், புணரமைப்பு, உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் வாதப் பிரதி வாதங்களுடன் கருத்துக்கள் பரிமாறப்பட்டு கலந்துரையாடப்பட்டன.













SHARE

Author: verified_user

0 Comments: