20 Mar 2020

மண்முனை தென்மேற்கில் கிருமி அழிப்பு செயற்பாடு முன்னெடுப்பு.

SHARE
(துசா)

மண்முனை தென்மேற்கில் கிருமி அழிப்பு செயற்பாடு முன்னெடுப்பு.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி விசுறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

பிரதேசத்திற்குட்பட்ட பேருந்து தரிப்பிடம்,  ஆலயம்,  வைத்தியசாலை,  அரசதிணைக்களங்கள் உள்ளிட்ட மக்கள் ஒன்று சேருகின்ற இடங்களில்  இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.

பிரதேச சபையினரும் பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கைகளை சுத்தப்படுத்துவதற்கான வசதிகளும் அரச திணைக்களங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.





SHARE

Author: verified_user

0 Comments: