12 Feb 2020

வீதியைக் கடக்க உதவி கேட்ட மூதாட்டியின் தங்கச் சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த திருடன் தப்பியோட்டம்

SHARE
வீதியைக் கடக்க உதவி கேட்ட மூதாட்டியின் தங்கச் சங்கிலி பறிப்புமோட்டார் சைக்கிளில் வந்த திருடன் தப்பியோட்டம்.
மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு நபரொருவர் தப்பியோடிய சம்பவம் பற்றி முறையிடப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை 12.02.2020 மட்டக்களப்பு – பதுளை வீதி பன்குடாவெளிச் சந்தியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பன்குடாவெளி கொளனிப் பகுதியில் வசிக்கும் நாகண்டான் நாகம்மா (வயது 85) என்ற மூதாட்டியே பாதிக்கப்பட்டவராவார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, இந்த மூதாட்டி பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியைக் கடப்பதற்காக சற்று நேரம் காத்திருந்து அவ்வழியில் வந்த நபரிடம் வீதியைக் கடக்க உதவுமாறு கேட்டிருக்கிறார்.

அப்பொழுது அந்த நபர்  தான் உதவுவதாகப் பாசாங்கு செய்துவிட்டு மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த முக்கால் பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளார்.

அந்நபர் முகம் முழுவைதையும் மறைக்கும் வண்ணம் தலைக்கவசம் அணிந்திருந்ததாக மூதாட்டி பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம்பற்றி கரடியனாறு பொலிஸார் ஸ்தலத்திற்குச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: