6 Feb 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர்.பூபாலபிள்ளை கணேசலிங்கத்தின் திருவுருவச் சிலை திரை நீக்கமும், நினைவு சிறப்பு மலர் வெளியீடும்.

SHARE
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர்.பூபாலபிள்ளை கணேசலிங்கத்தின் திருவுருவச் சிலை திரை நீக்கமும், நினைவு சிறப்பு மலர் வெளியீடும்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதியின் தமிழர் விடுதலைக் கூட்டணியின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர்.பூபாலபிள்ளை கணேசலிங்கத்தின் திருவுருவச் சிலை திரை நீக்கமும், அவரது நினைவு சிறப்பு மலர் வெளியீடும், வியாழக்கிழமை (06) மாலை பெரியகல்லாறு பொது நூலகத்தில் நடைபெற்றது. 

பெரியகல்லாறு பொது நூலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அன்னாரது சிலை இதன்போது திறந்து வைக்கப்பட்டதுடன், அன்னாரது நினைவு மலரும் வெளியீட்டு வைக்கப்பட்டன.

சிலை அமைப்பு ஏற்பாட்டாளர் குழுமத்தின், தலைவர் பா.இன்பராசா தலைமை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் காலநிதி.பொன்iயா சுரேஸ், அவர்களும், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களும், கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், முன்னான் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, அமரர்.பூ.கணேசலிங்கத்தின் மகன் முகுந்தன், பமண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சண்.கணேசநாதன்,   இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன்மதத் தலைவர்கள், கிராம பெரியேர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதன்போது கலந்து கொண்டிருந்ததுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன.





































SHARE

Author: verified_user

0 Comments: