4 Feb 2020

சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு - பொது மன்னிப்பில் மட்டு சிறைச்சாலையில் உள்ள 7 கைதிகள் விடுதலை,

SHARE
சுதந்திர தினத்தை முன்னிட்டு  மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு - பொது மன்னிப்பில் மட்டு சிறைச்சாலையில் உள்ள 7 கைதிகள் விடுதலை.
இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சமுக நலத் திட்டங்கள் செவ்வாய்கிழமை (04) முன்னெடுக் கப்பட்டன. இலங்கை சிறைச்சாலை திணைக்களத்தினால் மட்டக்களப்பு திருப்பெருந்துறை சிறைச்சாலை வளாகத்தினுள் சுதந்திர தினத்தை முன்னிட்டு 100 பயன் தரும் பழ மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம சிறைச்சாலை பொறுப்பதிகாரி சம்பத் ஜெயசுந்தர தலைமையில் இடம்பெர்ரது.

இங்கு கல்முனை மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் மரக்கன்றுகளை நட்டிவைத்தனர். இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக  இலங்கை சிறைச்சாலை திணைக்களத்தின் சுப்பிரின்டன் எல்.விஜயசேகர கலந்துகொண்டார். 

இதேவேளை இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள 7 கைதிகள் செவ்வாய்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். இதில் பெண்கைதி ஒருவரும் 6 ஆண் கைதிகளும் அடங்குவர். மட்டக்களப்பு சிறைச்சாலை உயர் அதிகாரிகள் உறவினர்கள் விடுதலை நிகழ்வில் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: