20 Jan 2020

மட்டு திருப்பழுகாமத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.

SHARE
மட்டு திருப்பழுகாமத்தில் நடைபெற்ற பொங்கல் விழா.
மட்டக்களப்பு திருப்பழுகாமம் இந்து கலா மன்றத்தின் 45 வது ஆண்டு நிறைவு விழாவும், பொங்கல் விழாவும் ஞாயிற்றுக்கிழமை (19) பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய முன்றலில் தலைவர் அ.ஜீவரெத்திம் தலைமையில் நடைபெற்றது. 

45 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பஜனைபாடல் திரட்டு நூலொன்றும் வெளியீட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, கலை நிகழ்வுகள் என்பவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.கிருஷ்ணபிள்ளை, மற்றும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: