17 Jan 2020

தைப்பொங்கல் தினத்தன்று சுரவணையடியூற்று ஸ்ரீ கற்பக பிள்ளையார் ஆலயத்தில் விஷேட நிகழ்வுகள்.

SHARE
(சுரவணையூர் தவா) 

தைப்பொங்கல் தினத்தன்று சுரவணையடியூற்று ஸ்ரீ கற்பக பிள்ளையார் ஆலயத்தில் விஷேட நிகழ்வுகள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுரவணையடியூற்று ஸ்ரீ கற்பக பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு  நாமகள் இந்து கலாமன்றத்தின் ஏற்பாட்டில் பண்ணிசை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. நாமகள் இந்து கலாமன்றத்தின் தலைவர் த.தசதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆலய பிரதம குரு உமாகாந்தா சர்மா அவர்களின் ஆசி உரையுடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.  

இதன்போது மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் வகையில், இந்து சமயத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் போட்டிகள் இடம்பெற்றன. இதனை துறைசார்ந்த  ஆசிரியர்களான த.யோகதர்ஷினி மற்றும்  ரா.கேமராஜ்   ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். 

இந்நிகழ்வில் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் து.தங்கத்துரை மற்றும் உறுப்பினர்கள், கிராமத்தில் அமைந்துள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 









SHARE

Author: verified_user

0 Comments: