மட்டக்களப்பு மாவட்டத்தில் வான் கதவுகள் திறப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக மாவட்டத்திலுள்ள பிரதான நீர்ப்பாசன குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து உன்னிச்சை, உறுகாமம் ஆகிய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் சந்திரசேகரன் நிறோஜன் ஞாயிற்றுக்கிழமை 22.12.2019 தெரிவித்தார்.
உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் 32 அடி 4 அங்குலம் உறுகாமக் குளத்தின் நீர்மட்டம் 18 அடிகளாகவும் அதிகரித்ததுடன் 2 அடி வான்பாய்ந்து கொண்டிருக்கிறது, உன்னிச்சை குளத்தின் மூன்று வான்கதவுகள் 3 அடியும் உறுகாமம் குளத்தின் 2 வான் கதவுகள் 8 அடியும் திறந்தவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment