12 Nov 2019

மாய வார்த்தைகளுக்கு எமது மக்கள் மயங்கிவிடக்கூடாது - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இளைஞர் அணி தலைவர் க.ஹரிபிரதாப்

SHARE
17 ஆம் திகதி மொட்டு மலரும் பொதுஜன பெரமுன இளைஞர் அணி தலைவர் ஹரிபிரதாப்


ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆதரவாக தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (11.11.2019 ) திங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி  சன்சைன் கிரேண்ட் மண்டபத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனஇளைஞர் அணி தலைவர் க.ஹரிபிரதாப் தலைமையில் நடைபெற்றது.

இளைஞர் அணி தலைவர் க.ஹரிபிரதாப் கூறுகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களை திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றுகின்றன. வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், வாக்குகளை பெறுவதற்காக மேலும் பல உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றன.மட்டக்களப்பு இளைஞர்கள் ஏமாற தயாரில்லை அபிவிருத்தி முன்னெடுத்துச் செல்வோம் அதற்கு நாம் செய்ய வேண்டியது மொட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனவே, மொட்டு சின்னத்துக்கு வாக்களிப்போம் 17 ஆம் திகதி மொட்டு மலரும் என்று கூறினார்.


கூட்டங்களில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் அதன் ஸ்தாபகருமான பஷில் ராஜபக்‪ஷ கோட்டாபயவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் தமது ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் நல்லாட்சியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதும் அந்த அபிவிருத்திகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் ,கிழக்கில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை புதியவேலை திட்டங்களை நாங்கள் முன்னெடுப்பதாக உள்ளோம்  எனவும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே, இவர்களின் மாய வார்த்தைகளுக்கு எமது மக்கள் மயங்கிவிடக்கூடாது. சிந்தித்து, சமூகமாற்றத்துக்காக மொட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.




SHARE

Author: verified_user

0 Comments: