3 May 2019

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகள், பிரதேச செயலகங்கள், வைத்தியசாலைகள் மற்றும் திணைக்களங்களின் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் இடம்பெற்றது.

SHARE
(விஜெய்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகள், பிரதேச செயலகங்கள், வைத்தியசாலைகள் மற்றும் திணைக்களங்களின் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகள், பிரதேச செயலகங்கள், வைத்தியசாலைகள் மற்றும் திணைக்களங்களின் பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் பிரதி பொலிஸ்மாதிபர் அஜச கருணாரெத்தன  பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந் தலைமையில் வெள்ளிக்கிழமை (03)காலை 10.00 நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்து உதவிப்பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாட், மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலங்களின் பிரதேச செயலாளர்கள், கல்வி வலயங்களின் பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொலிசார், இராணுவத்தினர், விமானப்படையினர், உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

எதிர்வரும் திங்கட்கிழமை(06) நாடளாவியரீதியில் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கபடவுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 339 பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள், பாடசாலையின் சுற்றுச்சூழல் சம்பந்தமான விடயங்கள், பாடசாலைக்கு வருகைதருகின்ற மாணவர்களுக்கும், பாடசாலையில் கடமையாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களின் பாதுகாப்பு, பாடசாலைகளுக்கு பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம் போன்றன விரிவாக இதன்போது ஆராயப்பட்டது.

மேலும் பாடசாலைகள் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதால் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாவட்டத்தில் உள்ள 339 பாடசாலைகளும் பொலிசார், இராணுவத்தினர் பாடசாலைக்கு சென்று பாடசாலைகளின் முக்கியமான இடங்கள், தண்ணீர்தாங்கிகள், வகுப்பறைகள் ,அலுமாரிகள், களஞ்சியசாலைகள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு ஒவ்வொரு பாடசாலையும் முழுமையாக பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இதற்கு பாடசாலையின் அதிபர், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களின் பங்களிப்பு, ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என பிரதி பொலிஸ்மாதிபர் அஜச கருணாரெத்தன இதன்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலங்கள், வைத்தியசாலைகள், ஏனைய திணைக்களங்களின் பாதுகாப்பின் தேவை, திணைக்களங்களுக்கு பாதுகாப்பு தேவையென்றால் அதனை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று பொலிஸ் பாதுகாப்பை பெற்றுக்கொள்ளலாம். வதந்திகளை பரப்புவோர் சம்பந்தமாக பொதுமக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

பாடசாலைகள், திணைக்களங்களில் கடமையாற்றும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்களின் திணைக்களத்திற்குரிய அடையாள அட்டையைச் எடுத்துச் செல்வதோடு, திணைக்கள அடையாள அட்டை இல்லாதவர்கள் இன்றே அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுங்கள்.

குறிப்பாக அனைத்து அரசாங்க உத்தியோகஸ்தர்களும் நாட்டினதும், பொதுமக்களினதும், மாணவர்களினதும், குழந்தைகளினதும் பாதுகாப்பு கருதி அனைவரும் பாதுகாப்புகருதி ஒத்துழைக்க வேண்டும்.

குறிப்பாக செய்திகளை எழுதுவோர் செய்திகளை உறுதிப்படுத்தி செய்திகளை உறுதிப்படுத்தியவுடன் எழுதி பிரசுரிக்கவேண்டும். என இதபோது எடுத்துரைக்கப்பட்டன.





SHARE

Author: verified_user

0 Comments: