29 May 2019

நீராடச் சென்ற குடும்பஸ்தர் மூழ்கி மரணம்.

SHARE
மட்டக்களப்பு 39ம் கொலனி வாய்காலில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மூழ்கி மரணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை 28.05.2019 பிற்பகல் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் களுவாஞ்சிக்குடி குறுமன்வெளியைச் சேர்ந்த சந்திரகுமார் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கொண்ட நண்பர்கள் 6 பேர் பொழுது போக்கிற்காகச் சென்று நிலையில் சந்திரகுமார் முதலில் நீரோடையில் குதித்த போது  நீர்ச் சுழியில் முழ்கி தத்தளித்துள்ளார்.

அவரை காப்பாற்ற எத்தனித்த நண்பர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக நீரில் குதித்த நிலையில் அவர்களும் மூழ்கி தத்தளித்ததையடுத்து மூவரையும் மீட்பதற்காக எனைய நண்பர்கள் முயற்சித்து இருவரை மீட்டதுடன் முதலில் நீரில் குதித்தவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவரை செவ்வாய்க்கிழமை இரவு வரையும் தேடியும் அவரை கண்டுபிடிக்காத நிலையில் புதன்கிழமை காலை வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .

சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: