கொழும்பு தமிழ்ச் சங்கம் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் நடத்தும் இசைப்போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் திருகோணமலை 10, மட்டக்களப்பு 50, அம்பாறை 6 என்ற எண்ணிக்கையில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப்போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வில் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், வலயக்கல்விப் பணிப்பாளர் , பாடசாலை அதிபர் ஆகியோர் உட்பட மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 Comments:
Post a Comment