18 Jan 2019

எதிர்க்க துணிந்தால் தமிழ் வாழும் எதர்க்கும் துணிந்தால் தமிழ் ஆளும் - மட்டு. அரசாங்க அதிபர்

SHARE
எதிர்க்க துணிந்தால் தமிழ் வாழும் எதர்க்கும் துணிந்தால் தமிழ் ஆளும் - மட்டு. அரசாங்க அதிபர்.
எதிர்க்க துணிந்தால் தமிழ் வாழும் எதர்க்கும் துணிந்தால் தமிழ் ஆளும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட உழவர் தின நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கருணமலைப் பிள்ளையார் ஆலய முன்றலில் வெள்ளிக்கிழமை (18) வெள்ளிக்கிழமை நடைபெற்ற போதே இதனைக்குறிப்பிட்டார்.

மேலும், அங்கு உரையாற்றுகையில்,

தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் மிக முக்கியமானதாக தைப்பொங்கல் விழா விளங்குகின்றது. உழவர்கள் சூரியனுக்கு, பட்டிகளுக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும் இது கொண்டாடப்படுகின்றது. இதனை உழவர்கள் வாழுகின்ற போரதீவுப்பற்று பிரதேசத்தில் கொண்டாடு வதையிட்டு மகிழ்கின்றேன்.

வேளாண்மை தொழிலை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்களே. இவ்வாறான பண்பாடுகளை இளம் சந்ததிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்நிகழ்வுகளை மாவட்டமே இணைந்து நடாத்துகின்றது எதிர்க்க துணிந்தால் தமிழ் வாழும் எதர்க்கும் துணிந்தால் தமிழ் ஆளும் என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: