களுவாஞ்சிகுடியில் வெள்ளிக்கிழமை (25) காலை இடம்பெற்ற விவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
மட்டக்களப்பு பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் வீதியைக் குறுக்கீடு செய்த அணில் குஞ்சுக்கு வழிவிடுவதற்காக பிறேக் படித்துள்ளார். இந்நிலையில் செட்டிபாளையம் பகுதியிலிருந்து வயலில் பூசை செய்வதற்காக பூசைப் பொருட்களுடன் பின்னால் வந்த முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிளில் மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தானர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மூவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளும் சேதடைந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியும் பெரும் சேத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முள்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment