27 Jan 2019

தலைக்கவசம் அணியாமல் மோட்டார்சைக்கிளில் வலம் வரும் பௌத்த பிக்கு.

SHARE
தலைக்கவசம் அணியாமல்  மோட்டார்சைக்கிளில் வலம் வரும் பௌத்த பிக்கு.
சாதாரணமாகவே தலைக்கவசம் அணியாலம் மோட்டார் சைக்கிளில் யாராவது சென்றால் அவர்களுக்கு தகுந்த தண்டப்பணம் பொலிசாரால் விதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பௌத்த மதகுரு ஒருவரை இன்னுமொருவர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் வீதியில் பயணிப்பதை பலரும் கண்டு வியப்பில் பார்துக் கொண்டிருந்தது எமது கமாவில் பதிவாகியது.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (25) களுவாஞ்சிகுடி நகரில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பௌத்த மதகுருவை தலைக்கவசம் அணியாமல் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் முன்னாலே பணிப்பதை வீதியில் சென்ற பொதுமக்கள் பலரும் அதானித்துச் சென்றுள்ளனர்.

இதே நிலையில் இன்னுதொரு மத குருவை வேறு யாரும் தலைக் கவசம் அணியாமல் பொலிசார் முன் சென்றால் அவரின் நிலைமை எப்படியிருக்கும் என வீதியருகில் நின்றவர்கள் தங்களுக்குள்ளே கதைத்துக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.




SHARE

Author: verified_user

0 Comments: