பஸ்சுக்காக ஓடிய போது கல்லில் கால் தடுக்கி விழுந்ததில் மயக்கமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியி;ல் மரணித்து விட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் வெருகல் பகுதியிலுள்ள தனது மரக்கறித் தோட்டத்திலிருந்து கதிரவெளிக்கு வருவதற்காக தயாரானபோது பஸ் வருவதைக் கண்டு பஸ்ஸை நிறுத்தி ஏறிக்கொள்வதற்காக ஓடிச் சென்றுள்ளார்.
அப்போது கால் கல்லில் தடக்கி வீழ்ந்து மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை வாகரை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் ஏற்கெனவே அவர் உயிர் பிரிந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் சனிக்கிழமை மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
0 Comments:
Post a Comment