ஆடுகளைப் பிடிப்பதற்கு வந்த முதலை ஒன்றை மடக்கிப் பிடித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச சுற்று வட்ட அதிகாரி ஏ.ஹலீம் செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார்.
தும்பங்கேணியில் அமைந்துள்ள ஆட்டுப் பண்ணை ஒன்றிற்குள் ஆடுகளைப் பிடிப்பதற்கு இம்முதலை உள்துளைந்துள்ளது. அந்த ஆட்டுப்பணை அமைந்துள்ள இடத்திற்கு அருகிலுள்ள சிறிய குட்டை ஒன்றிலிருந்தே இம்முதலை வந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
5 வயது மதிக்கத்தக்க இம்முதலையை நவகிரிப் பகுதியில் அமைந்துள்ள ஆற்றில் விடவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச சுற்று வட்ட அதிகாரி ஏ.ஹலீம் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment