4 Nov 2018

அற்ப சலுகைகளுக்கான வியாழேந்திரன் எம்.பி சென்றுள்ளார் - யோகேஸ்வரன் எம்.பி. குற்றச்சாட்டு.

SHARE
நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும், அவருக்கு அமைச்சுப் பதவி கேட்டு பல இடங்களில் திரிந்தவர். அவருடைய நிலையில் அமைச்சும், காசும் இல்லாமல் அவரால் வாழமுடியாது. அவருக்குப் பின்னணியாக இருப்பது காசுதான். இது தொடர்பில் மக்களாலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில் எமது கூட்டமைப்பிலிருந்து நீண்டகாலமாக மாறக்கூடிய சூழல் இருந்து வந்தது அவர் தற்போது மாறியிருக்கின்றார். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து கொண்டு புதிய பிரதமருக்கு ஆதரவு தெரிவித்து பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனின் இம்முடிவு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனிடம் ஞாயிற்றுக்கிழமை (04) தொடர்பு கொண்டு வினவியபோது…

நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் எமது கட்சியிக் தலைமைப் பீடத்திற்கும் அறிவித்திருந்தோம், அதிலும் நாம் எச்சரிக்கையாகவும் இருந்தோம், ஆனால் அவர் திடீரென கனடா நாட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர் அவர் மீண்டும் இலங்கை வந்ததும் விமான நிலையத்திலிருந்தே நேரடியாக அரசுபக்கம் சென்றுவிட்டார்.

இதுவரைகாலம், அவர் தமிழ் மக்களின் மீது கருசனை கொண்டதுபோல், செயற்பட்டது, நடித்தது, அவருடைய போலியான முகாமாகும். அவர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் கல்விப் பொறுப்பாளராக இருந்த செயற்பட்டவர். அது மாத்திரமின்றி அவர் கற்பிக்கும் பிரத்தியேக வகுப்பில தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுருக்கப் பெயராக உள்ள த.தே.கூ. என்ற எழுத்துக்களை மாணர்கள் மத்தியில் எழுதி தமிழர்களுக்கு தேவையற்ற கூட்டமைப்பு என அர்த்தம் கற்பித்து படிப்பித்தவர். பின்னர் அவருக்கு எமது கூட்டமைப்பு தேவைப்பட்டது. 

அவரது பிரத்தியேக வகுப்பில் கற்கும், மாணவர்களை அழைத்து பிரச்சாரம் செய்து வெற்றிபெற்று மதப்பிரச்சாரங்களையும் செய்தார். குறிப்பாக மாவட்டத்திலுள்ள கிறிஸ்த்தவ தேவாலயங்களின் நிருவாகத்தினரை அழைத்து நாங்கள் இந்து தீவிரவாதி என விமர்சனம் செய்தார். இதனாலும் அவருக்கு சிலர் வாக்களித்திருந்தார்கள். 

தற்போது வாக்களித்த மக்களையெல்hம் ஏமாற்றிவிட்டு என்னென்னவெல்லாம் பெற முடியுமோ அவற்றையெல்லாம் பெற்றுவிட்டு சுக போக வாழ்க்கைக்காக  போயிருக்கின்றார். 

மாவட்டத்தில் சில அரச அதிகாரிகள் இவ்வாறான அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்திருக்கின்றார்கள்.  ஏனெனில் அவர்களின் பதவி உயர்வு, போன்றவற்றிக்கு உதவும் என நினைக்கின்றார்கள்.  இந்நிலையில் தமிழினத்தின் போராட்டத்தை நன்கு உணர்ந்த, உணர்வு படைத்த, நியாயமான எமது கொள்கைளை உணர்கின்ற மக்கள் மத்தியில் இவர் நிராகரிக்கப்படுகின்ற சூழல்தான் மட்டக்களப்பில் காணப்படுகின்றது. 

வியாழேந்திரன் புளட் கட்சி சார்ந்தவராக இருந்தலும், எங்களது தமிழரசுக் கட்சியில்தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தர். அவருடைய புளட் கட்சி இவரை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக தற்போது அறிவித்திருக்கின்றது. அதற்கிணங்க எமது தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் எமது கட்சியிலிருந்து நீக்குவதாக தேர்தல் ஆணையாளருக்கு கடிதத்தை அனுப்பி வைப்பார். என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: