திருகோணமலை, பம்புறுகஸ்வெவ பகுதியில் வைத்து, இன்று (20) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில், கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில், தாயாரான 38 வயதுடைய எஸ். பிசோமெனிக்கே, கால் உடைந்த நிலையிலும், அவரது மகனான 12 வயதுடைய தனுஷ், தலை, நெஞ்சுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment