பட்டிருப்பு கல்வி வத்திற்குட்பட்ட 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா வித்தியாலயத்தின் அதிபர் ரீ.சபேசன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தவராசா அவர்களும் சிறப்பு அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் போராதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களும், விஷேட அதிதியாக கோட்டக்கல்வி பணிப்பாளர் ரீ.அருள்ராசா, உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதாகரன், உதவிக்கல்வி பணிப்பாளர் என்.நேசகஜேந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.திருச்செல்வம், விரிவுரையாளர் எஸ்.தசரதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தவராசா அவர்களும் சிறப்பு அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் போராதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி அவர்களும், விஷேட அதிதியாக கோட்டக்கல்வி பணிப்பாளர் ரீ.அருள்ராசா, உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதாகரன், உதவிக்கல்வி பணிப்பாளர் என்.நேசகஜேந்திரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் கே.திருச்செல்வம், விரிவுரையாளர் எஸ்.தசரதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாடசாலையில் இருந்து க.பொ.சா.தரம், க.பொ.த உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சாதனை படைத்த மாணவர்கள், மற்றும் விளையாட்டு போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்த மாணவர்கள், தமிழ்த்தினப்போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்த மாணவர்கள் அனைவரும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றி அதிதிகள் அனைவரும் நகர்ப்புற பாடசாலை ஒன்றில் நடைபெறும் தரம்வாய்ந்த விழாவைப்போன்று இப்பரிசளிப்பு விழா அமைந்துள்ளதாகவும், இவ் விழாவில் எவ்வித குறைகளையும் காணாமுடியாதபடி மிகவும் சிறப்பான ஒழங்கமைக்கப்பட்டு நடைபெற்றதாகவும் இதனை ஒழுங்கமைத்து மேற் கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக அதிதிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment