25 Oct 2018

மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 சதவீதமான அளவு காடுகள்தான் காணப்படுகின்றன – அரசாங்க அதிபர்

SHARE
(நவா)

ஓக்டோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கையிலே தேசிய மரநடுகை மாதமாக வனரோபா என்ற பெயரிலே எங்களுடைய திமேதகு ஜனாதிபதி அவர்களுடைய சிந்தனையிலே இது செற்படுத்தப்படுகிறது என அறிவீர்கள். அதனை மகாவலி நீர்ப்பாசன அமைச்சினூடாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டு வருகின்றன. அதனுடைய நோக்கம்; இலங்கையிலே ஆரம்ப காலங்களில் எங்களுடைய புவியின் மேற்பரப்பில் 80 சதவீதமானவை காடுகளாக இருந்துள்ளன. தற்போது அதனுடைய தொகை 29.4 சதவீதமாக குறைந்திருக்கின்றது. அதனை மனிதர்களும் இயற்கையும் அழித்திருக்கின்றார்கள் சில வேளைகளில் இயற்கையும் அதற்குகாரணமாக அமைந்திருக்கலாம்.
எனமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்துள்ளர்.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள எல்லைக் கிராமங்களான றாணமடு, மாலையர்கட்டு, சின்னவத்தை, பாலையடிவட்டை, கண்ணபுரம், செல்வாபுரம், போன்ற பிரிவுகளில் ஒருலெட்சம் பனை விதைகள் நடும் வேலைத்திட்டம் புதன்கிழமை (24)  பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி; தலைமையில் நடைபெற்றது.  இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்;போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

ஓக்டோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கையிலே தேசிய மரநடுகை மாதமாக வனரோபா என்ற பெயரிலே எங்களுடைய திமேதகு ஜனாதிபதி அவர்களுடைய சிந்தனையிலே இது செற்படுத்தப்படுகிறது என அறிவீர்கள். அதனை மகாவலி நீர்ப்பாசன அமைச்சினூடாக இந்த ஏற்பாடுகள் செய்;யப்;பட்டுக் கொண்டு வருகின்றன. அதனுடைய நோக்கம்; இலங்கையிலே ஆரம்ப காலங்களில் எங்களுடைய புவியின் மேற்பரப்பில் 80 சதவீதமானவை காடுகளாக இருந்துள்ளன. தற்போது அதனுடைய தொகை 29.4 சதவீதமாக குறைந்திருக்கின்றது. அதனை மனிதர்களும் இயற்கையும் அழித்திருக்கின்றார்கள் சில வேளைகளில் இயற்கையும் அதற்குகாரணமாக அமைந்திருக்கலாம். அந்த காற்றினுடைய பயன்பாடு சம்மந்தமாக நாங்கள் எல்லோராலையும் அறிவோம் அந்த காட்டினுடைய அளவினை 32சதவீதமாகஅதிகரிக்கவேண்டுமென  ஜனாதிபதி அவர்கள் இலங்கை பூராகவும் மரங்களை நட்டு அவற்றினூடாக மரங்களுடைய எண்ணிக்கையில் காடுகளின் அளவினை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாக தற்போது இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நிகழ்த்திருக்கிறார்கள்.

காட்டினுடைய சராசரி 29.4 வீதமாக இருந்தாலும் மட்டக்களப்பைப் பொறுத்த வரையில் 11 சதவீதமான அளவுதான் எங்களுடைய காடுகள் எங்களுடைய பிரிவுகளில் காணப்படுகின்றன. இதனுடைய தேவையினை உணர்ந்து இவ்வாறான ஏற்பாட்டினை செய்தமைக்காக பிரதேச செயலாளர் அக்ரா நிறுவனம் அதனுடைய ஆலோசகர் அவர்களுக்கும் பாராட்டுக்ககையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். 

எங்களுடைய  மூதாதைகள் எவ்வாறு எங்களுக்கு இயற்கையை கையளித்தார்களோ அதைவிட சிறப்பாக எதிர்கால சந்ததிகளுக்கு அந்த இயற்கையை நாங்கள் கையளிக்கதேவையுள்ளது என அவர் தெரிவித்தார்.

இவ்வேலைத்திட்டத்தை அக்ரா நிறுவனத்துடன் இணைந்து ஒருலெட்சம் பனை விதைகளை சேகரிக்கப்பட்டு எல்லைப்புறங்களான இப்பிரதேசங்கில் நடுவதன் மூலம் யானைகள் வருவதை தடுக்கமுடியும் என்பதற்காக இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந் நிகழ்வின் போது மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி, உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன், உதவித்திட்டமிடப்பணிப்பாளர் எஸ்.சசிகுமார், கணக்காளர் நாகேஸ்வரன் பனை அபிவிருத்திச்சபை மாவட்ட முகாமையாளர் த.விஜியன், அட்ரா திட்டமுகாமையாளர் என்.சுரேஸ்குமார், வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் நா.சுரேஸ்குமார், மத்திய நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எம்.பத்மதாசன், கோட்டக்கல்வி அதிகாரி, மற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், சாரணிய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், கமநல அமைப்புக்கள், சங்கங்ள், கழகங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். 



















SHARE

Author: verified_user

0 Comments: