7 Jun 2016

மட்டக்களப்பு புன்னச் சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்.

SHARE
(இ.சுதா)

வரலாற்றுப்புகழ் மிக்க மட்டக்களப்பு புன்னச் சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு திறக்கதவு திறத்தல் நிகழ்வுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 10ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை
4 மணியளவில் ஆலய முன்றலில் இடம் பெறும் தீமிதிப்பு வைபவத்துடன் வருடாந்த உற்சவமானது இனிதே நிறைவு பெறவுள்ளது.

தொடர்ந்து ஐந்து தினங்களாக இடம் பெறவுள்ள உற்சவ நிகழ்வின் போது மடை பரவுதல் கட்டுச் சொல்லல் அம்மன் எழுந்தருளல் செய்தல் போன்ற கிரியைகள் இடம் பெறவுள்ளதுடன் ஆலயத்தில் அடியவர்களின் நலன் கருதி அன்னதானம் வழங்குவதற்கு ஆலய பரிபாலன சபையினர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: