6 Jun 2016

வெளிநாட்டிலிருந்து மகள் அனுப்பிய பொதிகளிலிருந்த பொருட்கள் கொழும்பில் திருடப்பட்டுள்ளன. தாய் பொலிஸில் முறைப்பாடு.

SHARE

குவைத் நாட்டில் கடந்த ஏழு வருடங்களாக வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றும் தனது மகள் இதுவரை காலமும் உழைத்த சம்பாத்தியத்தின்
மூலம் கொள்வனவு செய்த பொருட்களை பொதிகள் மூலம் அனுப்பியதாக  அறிவித்திருந்தார்.

கொழும்புக்குச் சென்று வெளிநாட்டுப் பொதிகள் கையாளும் நிறுவனமொன்றிலிருந்து மகள் அனுப்பிய பொதிகள் இரண்டையும் பெற்றுக் கொண்டபோது மகள் அனுப்பிய முக்கியமான பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது என்று  தாயார் தனது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முறைப்பாடொன்று மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஞாயிறன்று (05.06.2016) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் கொம்மாதுறை ஒருமுழச்சோலையைச் சேர்ந்த கே. மங்கையற்கரசி (வயது 54) என்பவரே பொதியிலுள்ள பொருட்கள் திருட்டுப்போனது பற்றிய முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

தனது மகளான கோவிந்தன் வனிதா (வயது 26) குடும்ப வறுமை காரணமாக கடந்த 7 வருடங்களாக குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து வருவதாகவும் அந்த சம்பாத்தியத்தின் மூலம் சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிய பொருட்களை பொதி செய்து பொதி கையாளும் முகவர் நிறுவனம் ஒன்றினூடாக அனுப்பியிருந்தார்.

ஆனால், ஆவலோடு கொழும்பு சென்று பொதிகளைக் கையேற்றபோது பொதிகள் ஏற்கெனவே உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த சுமார் 5 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இது தவிர வெளிநாட்டுப் பொதிகள் கையாளும் அந்த நிறுவனத்துக்கு பல்வேறுபட்ட கட்டணங்கள் உட்பட 34300 செலுத்தியே பொதிகள் இரண்டையும் பெற்றுக் கொண்டோம் என்றும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: