மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமூக பராமரிப்பு நிலையக் கட்டடமொன்று நேற்று(06) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் ஆகியோர் இந்தக் கட்டடத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர். இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன் மற்றும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.மணிவண்ணன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராஜா, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் வாழைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.வாசுதேவன் உட்பட உதவி பிரதேச செயலாளர்கள், சமூக சேவை திணைக்களத்தின் அதிகாரிகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் ஐந்து மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இந்த சமூக பராமரிப்பு நிலையக் கட்டடம் நிர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டடத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சமூக பராமரிப்பு நடவடிக்கைகள் இடம் பெறவுள்ளன.
இதன்போது முதியோர் சங்கங்களுக்கு சக்கரக்கதிரைகள், முதியோர் பராமரிப்பு நிலையங்களுக்கு பாவனைப் பொருட்கள் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளோருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment