30 May 2016

குப்பைகள் போடவேண்டாம் எனும் வாசகம் அடங்கிய பாதாகை இனந்தெரியாதோரால் அடித்து வீசப்பட்டுள்ளது.

SHARE
(க.விஜி) 

துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதானவீதியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் போடப்பட்ட  "இவ்விடத்தில் குப்பைகள்  போடவேண்டாம்" எனும் வாசகம் அடங்கிய பாதாகை இனந்தெரியாதோரால்
சனிக்கிழமை கிழமை இரவு (28) அடித்து வீசப்பட்டுள்ளது.

அப்பாதாகை நாட்டப்பட்ட இடத்துக்கருகில் குப்பை மூட்டைகளும், இனந்தெரியாதோரால் போடப்பட்டுள்ளன. வீட்டில் சேகரிக்கப்படும் சமையல்கழிவுகள், இலத்திரனியல் கழிவுகள், இறைச்சிக்காக பயன்படுத்தும் கழிவுகள், பிளாஸ்ரிக்கழிவுகள், ஆடைக்கழிவுகள், இரும்பு அலுமினியம் பீங்கான் ஓடுக்கழிவுகள், என்பனவற்றை துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் வீதிகளில் மிகவும் இலகுவான முறையில் வீசிவருகின்றார்கள். இதற்கு காத்திரமான முறையில் இதனைத்தடுப்பதற்கு மண்முனை தென் எருவில் பற்று  பிரதேசசபையால் குறித்த இடத்தில் பாதாகை நாட்டப்பட்டன.

இப்போது பதாகையை உடைத்து நாசமாக்கிக் கொண்டு அவ்விடத்திலே  குப்பைகளைக் வீசிவருகின்றன.


இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பொது அமைப்புக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என துறைநீலாவணை பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.







SHARE

Author: verified_user

0 Comments: