24 Apr 2016

கஞ்சாவுடன் மூவர் கைது

SHARE
மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஞ்சா விற்பனை செய்வதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதின் பேரில் ஞயாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

ஏறாவூர் மீராகேணியில்  உள்ள இரண்டு வீடுகளில் மறைந்திருந்த முறையே 32  வயதான சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 3000 மில்லிகிராம் கஞ்சாவும், 40 வயதான மற்றொரு நபரிடமிருந்து 3100 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதோடு அதனை தம்வசம் வைத்திருந்த அந்த நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மிச்நகர் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 2220 மில்லிகிராம் கஞ்சாவுடன் 21 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: