23 Apr 2016

மட்டு.கல்முனை பிரதான வீதியில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

SHARE

மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி மதுபானசாலைக்கு முன்னால் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் இன்று காலை 6.00மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தை சேர்நத 4 பிள்ளைகளின் தந்தையான 70 வயதுடைய க.தர்மலிங்கம் என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. 

ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விராசரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
SHARE

Author: verified_user

0 Comments: