அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (23.04.2016) மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ஈமானிய (விசுவாச) எழுச்சி மாநாடு ஏறாவூர் தௌஹீத் ஜும்மாப் பள்ளியில்
இடம்பெற்றது.
மாலை 3.30 மணியிலிருந்து இரவு 9.30 மணிவரை இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கையின் பிரபலமான மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவாற்றினார்கள்.
இறை விசுவாசத்தைப் பலப்படுத்தி, வணக்க வழிபாடுகள் மீதான ஆர்வத்தை அதிகரித்து அகிலத்தை அமைதிப் பூங்காவாகப் பேணும் நோக்கில் இந்த விசுவாச மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் மாவட்டத்திலிருந்தும் மாவட்டத்திற்கு வெளியிலிருந்தும் வருகை தந்திருந்த சுமார் 2000 இற்கும் மேற்பட்டோர் சன்மார்க்கப் போதனைகளைச் செவியேற்றதாக றாபிதது அஹ்லிஸ் ஸ{ன்னா மட்டக்களப்புக் கிளை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment