அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் புதிய சாதனை படைத்த களுதவளை மாணவனுக்கு அமோக வரவேற்பு.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையைச் சேர்ந்த குகன் பகிர்ஜன் என்ற மாணவன் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம்பாய்தல் போட்டியில் கலந்து கொண்டு இலங்கையில் புதிய சாதனையைப் படைத்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இவருடன் போட்டியிட்ட ஏனைய மாணவர்களை வீழ்த்தி 1.98 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையில் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் புதிய சானையைப் பதடைத்துள்ளார். இப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை(12.10.2025) இப்போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்து.
சாதனை படைத்த பகிர்ஜன் திங்கட்கிழமை காலை தனது பாடசாலைக்குத் திரும்பி வரும் வழியில் அயல் பாடசாலைகளால் வீதியில் நின்று வரவேற்கப்பட்டதோடு, பட்டிருப்பு வலயக் கல்வி கல்விப் பணிப்பாள்ர் சி.சிறிதரன் அவர்களாலும், வரவேற்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
இந்நிலையில் அவரது பாடசாலையான களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையில் திங்கட்கிழமை மலர் மாலை அணிவிக்கப்பட்டு, வேண் வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டு, பின்னர் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் வைத்து பாராட்டு விழாவும் நடைபெற்றது. வித்தியாலய அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்வி அதிகாரிகள், முன்னாள் அதிபர்கள், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையில் பாசாலைகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 1.98 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாதனையைப் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற பகிர்ஜனைபாடாசாலைக் சமூகம், மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டு மாலை அணிவித்து, பொன்னாடை போரத்தி பணப் பரிசும் வழங்கி கௌரவித்தனர்.
0 Comments:
Post a Comment