31 Aug 2025

உரிமைகள் மற்றும் சமூக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் விழிப்புணர்வு.

SHARE

உரிமைகள் மற்றும் சமூக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் விழிப்புணர்வு.

மட்டக்களப்பில் இயங்கிவந்த மனித உரிமைகள் முதலுதவி மையமானது மனித உரிமைகள் மற்றும் சமூக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமாக சேர்ந்து பயணிக்கவுள்ளது. 

இதனைத் துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களுக்குத்  தெழிவுபடுத்தும் செயற்பாடகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(31.08.2025) மட்டக்களப்பில் இடம்பெற்றன. 

கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் பனிப்பாளர் வடிவேல் ரமேஷ் ஆனந்தனின் வழிகாட்டுதலில் றைற் ரூ லைப் நிறுவனத்தில் மனித உரிமைகள் மற்றும் சமூக  தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் இணைப்பாளர் சிவானந்தன் உபதாரணி தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பொதுச் சந்தை மற்றும் செங்கலடி போரூந்து தரிப்பு நிலையம், உள்ளிட்ட பல இடங்களிலும் இந்த  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன. 

மட்டக்;களப்பு சந்திவெளியிலிருந்து இயங்கிவரும் மனித உரிமைகள் முதலுதவி மையம் இன்றிலிருந்து அது மனித உரிமைகள் மற்றும் சமூக தொழில் முனைவோர் மேம்பாட்டு மையமாக பயணிக்கவுள்ளது. மனித உரிமைகள் தொடர்பில் செயற்பட்டு வந்த தமது தன்னார்வ அமைப்பானது இனிமேலும் மனித உரிமைகளுடன்சேர்த்து சமூக தொழில் முனைவோர் மேம்பாட்டு தொடர்பிலும் கரிசனை கொண்டு செயங்படவுள்ளதாக அவ்வமைப்பின் இணைப்பாளர் சிவானந்தன் உபதாரணி தெரிவித்தார்.


 


















SHARE

Author: verified_user

0 Comments: