குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம
முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி.
மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சமுத்திர திருக்குளிர்த்தி வியாழக்கிழமை(10.07.2025) நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை(01) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிய இவ்வாலயத் திருச்சடங்கு தொடர்ந்து பத்து நாட்கள் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து, வியாழக்கிழமை(10.07.2025) விநாயகர் பானை எழுந்தருளல் இடம்பெற்றதை தொடர்ந்து, முத்துமாரி அம்பாள் கிராம ஊர்வலமாகச் சென்றுசமுத்திர திருக்குளிர்த்தில் இடம்பெற்றது.
பக்தர்கள் புடைசூழ , ஆனிப்பூரணையில் சித்தயோகத்துடன் கூடிய சுப முகிர்த்த வேளையில் சமுத்திர திருக்குளிர்த்தி சடங்கு வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆலய சடங்குற்வம் யாவும் ஆலய பிரதம குரு, சிவ ஸ்ரீ நவரத்ன முரசொலிமாறன் குருக்கள் மற்றும் சிவகரன் குருக்கள் ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டன.
0 Comments:
Post a Comment