கொட்டும் கடும் மழைக்கு மத்தியில் நடந்தேறிய
தும்பங்கேணி கண்ணகி வித்தியாலய மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி.
இதன்போது பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் கலந்து கொண்டிருந்தார். இதன்போது நாவலர், பாரதி என இரண்டு இல்லங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களின் திறனாய்வு போட்டிகள் இடம்பெற்றன.
இதன்போது பாண்டு வாத்தியங்கள் முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டு தொடர்ந்து ஒலிம்பிக்தீபம் ஏற்றப்பட்டு, மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள், மற்றும், அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி, என்பன நிகழ்வை அலங்கரித்தன. மேலும் இதன்போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது மேலும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நே.விமல்ராஜ், பட்டிருப்பு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான பி.திவிதரன், எஸ்.சுரேஸ், பொதுமக்கள், பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment