மட்டக்களப்பில் தொடர்ந்து பலத்த மழை குளங்களின் நீர்மட்டங்கள் அதிபரிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, உள்ளிட்ட பல பிரதேசங்களிலுமுள்ள தாழ நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் மாவட்டத்தில் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்ளவதிலும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றர். எனினும் திங்கட்கிழமை(20.01.205)
காலையிலிருந்து மழை சற்று ஒய்ந்துள்ளபோதிலும் வெள்ள நீர் விரைவாக மட்டக்களப்பு வாவியை நோக்கி வழிந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, வெல்லாவெளி, பழுகாமம், போதீவு, குருமண்வெளி, உள்ளிட்ட பல பகுமிகளிலுமுள்ள கிராமியக் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிந்து வருகின்றன.
எனினும் கிராமங்களிலுள்ள பெரும்பாலான உள்வீதிகள் வெள்ள நீரினால் மூழ்கப்பட்டுள்ளனதனால் உள்ளுர் போக்குவரத்துச் செய்வதிலும் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க மண்டூர் - வெல்லாவெளி வீதியை ஊடறுத்து வெள்ளநீர் விரைவாகப் பாய்வதனால் அங்கு இராணுவதினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், அவ்வீதியுடனான போக்குவரத்திற்காக போரதீவுப் பற்றுப் பிரதேச சபை உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்தில் ஈடுபயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க திங்கட்கிழமை காலை 6 மணிவரையில் நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 31.அடி 5அங்குலம், உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 32அடி 8அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 18அடி 3அங்குலம், கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் 12அடி 6அங்குலம், கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் 12அடி 3அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16அடி 11அங்குலம், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13அடி 5அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாகவும் அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியிலாளர்கள் தெரிவித்துள்ளர்.
0 Comments:
Post a Comment