11 Apr 2024

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மட்ட விளையாட்டு விழா.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மட்ட விளையாட்டு விழா.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம், கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் மற்றும் செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டு கழகம், கிராம ஆலயங்கள், பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச மட்ட விளையாட்டு விழா புதன்கிழமை(10.04.2024) பிரதேச செயலாளர் திருமதிசிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் செட்டிபாளையம் கண்ணகி அம்மன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட செயலாளர் திருமதிஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன்மேலும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள மாகாண பணிப்பாளர் உதயகுமார் சிவராசாஉதவி பிரதேச செயலாளர் திருமதிசத்யகௌரி தரணிதரன்பிரதேச சபை செயலாளர் சா.அறிவழகன்பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள்செட்டிபாளைய கிராம ஆலய மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்அலுவலக உத்தியோகத்தர்கள்பொதுமக்கள் விளையாட்டுக் கழகங்கள்என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையில் இடம்பெற்ற மைதான மற்றும் குழுநிலை போட்டிகளின்  இறுதிப் போட்டி நிகழ்வுகளும்,  வெற்றியீட்டியோருக்கான சான்றிதழ்களும்வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 பிரதேச மட்ட விளையாட்டு நிகழ்வில் களுதாவளை கெனடி  விளையாட்டு கழகம் 24தங்கம், 22வெள்ளி, 12வெண்கலப் பதக்கங்களைப் பெற்று முதலாம் இடத்தையும்செட்டிபாளையம்    நீயூட்டன் விளையாட்டு கழகம் 12தங்கம், 11வெள்ளி, 10வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்திதையும் பெற்றுக் கொண்டனர்.




























SHARE

Author: verified_user

0 Comments: