4 Apr 2024

பாரிய தீ விபத்து 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்.

SHARE

பாரிய தீ விபத்து  50 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நகர் பகுதி உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் மேற்தளத்தில்  பாரிய தீ விபத்து  50 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட  புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் மேற்களத்தில் பாரிய தீ விபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாநகர சபை தீயணைப்புபடை பிரிவுக்கு தனவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள்  பரவி தீயை கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் தீயணைப்பு படை பிரிவு  வருவதற்கு முன்னரே பூட்டி இருந்த வீட்டிலே உள்ளிருந்த மின்சார உபகரணங்கள் விலை உயர்ந்த வீட்டின் தளபாடங்கள் அனைத்தும் தீயில் கருகியுள்ளன. இதனால் சுமார் 50 லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாய் உள்ளன

கட்டிடத் தொகுதியில் முதலாம் மாடியில் வீட்டின் உரிமையாளர்கள் இருந்த போதிலும் அவர்கள் வெளியில் சென்று இருந்த சமயம் கட்டடத்தின் மூன்றாம் மாடியில் இந்த மின் கசிவு காரணமாக தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

இத்தீ விபத்து சம்பந்தமாக மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் தற்போதைய அதிக உஷ்ண காலகட்டங்களில்மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

















 

SHARE

Author: verified_user

0 Comments: