2 Oct 2023

குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு.

SHARE

(ஸோபிதன்)

குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு.மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை(02.10.2023) நிகழ்வுகள் இடம்பெற்றன.

வித்தியாலய முதல்வர் சிறிதரன் அவர்கள் தலைமையில் வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களின் பாடல்கள், நடனங்கள், நாடகங்கள், சிறுவர் உரிமை தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது மாணவர்களிடையே போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்று அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதோடுமாணவர்களுக்கு சிறுவர் தின அன்பளிப்பு பொருட்களும் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு அதிபர், பிரதிஅதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்பேது சிறுவர் தினம் தொடர்பாக ஆசிரியர்களினால் பல்வேறு சிறப்புரைகளும் நடாத்தப்பட்டதுடன், சிறுவர் உரிமை , துஸ்பிரயோகம் சம்பந்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகளும் இடம்பெற்றன.

















 

SHARE

Author: verified_user

0 Comments: