மண்டூர் பகுயில் மக்கள் குடியிருப்புக்கு அருகில் கூட்டமாக நிற்கும் காட்டு யானைகள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் தொடர்ந்து காட்டு யானைகளின் அட்டகாசங்களும். தொல்லைகளும் அதிகரித்து வருகின்றன.அப்பகுதியில் தங்கி நிற்கும் காட்டுயானைகளை அப்புறப்பபடுத்திவிட்டு யானைப் பாதுகாப்பு வேலைகளை அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் தொடற்சியாக கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் அது இற்றைவரையில் நிறைவேறாத நிலமையே அற்கு காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சனிக்கிழமை(19.08.2023) படுவாங்கரைப் பிரதேசத்தின் மண்டூர் பகுதில் மக்கள் குடியிருப்புக்கு அருகில் பத்திற்கு மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக நின்பதை இங்கு காணலாம்.
0 Comments:
Post a Comment