போரினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்புத் தரப்பு குடும்பங்களின் நலன் பேணும் அமைப்பான ரணவிரு சேவா சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வு அதன் மாவட்டத் தலைவர் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப் தலைமையில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக மண்டபத்தில் புதனன்று 15.02.2023 இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர். குமாரசிறி ரணவிரு சேவா மாவட்ட இணைப்பு உத்தியோகத்தர் சமத் லியனகே உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ரணவிரு சேவா குடும்பங்களின் உறுப்பினர்கள் சுமார் 60 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ரணவிரு சேவா கிழக்கு மாகாண பணிப்பாளர் டபிள்யூ.டி. ஹேமச்சந்திர மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட சுமார் 144 இற்கு மேற்பட்ட பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த குடும்பங்கள் உள்ளார்கள்.
இவர்களில் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு ஏற்கெனவே சிறந்த வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அதேநேரம் ரணவிரு சேவா அமைப்பினூடாக பாடசாலை தொடக்கம் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் ரணவிரு சேவா குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகள், அங்கவீனர்களுக்கான உதவிகள், இலவச மருத்துவ வசதிகள் குறைந்த வட்டியிலான வீட்டுக் கடன்கள், சுயதொழிலுக்கான கடன் வசதிகள் உட்பட இன்னும் பல்வேறான நலன்புரி சேவைகள் உள்ளன. ஆயினும் இவ்வுதவிகளைக் கோரி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வேண்டுகோள்கள் வருவது குறைவாகவே உள்ளது.
2023ஆம் ஆண்டில் நீங்கள் பல்வேறு நலன்புரி சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மார்ச் மாதம் 15ஆம் திகதியளவில் நாம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ரணவிருசேவா குடும்பங்களின் நன்மை கருதி இடம்பெயர் சேவையொன்றினை வழங்கவுள்ளளோம். அத்தருணத்தில் ரணைவிரு சேவா தலைவரும் இங்கு சமூகமளித்திருப்பார். அதன்போது ரணவிரு சேவா குடும்ஙகள் தமது பிரச்சினைகளதை தீர்த்துக் கொள்வதோடு சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும். இடம்பெயர் மருத்துவ முகாமிலும் சேவைகள் வழங்கப்படவுள்ளன” என்றார்”
இந்நிகழ்வில் ரணவிரு சேவா குடும்பங்கள் தங்களது உறவுகளான பாதுகாப்புத் தரப்பினர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களது சம்பளம் ஓய்வூதியம் ஆகியவற்றைப் பெறுவதிலுள்ள நிருவாக ரீதியாக உள்ள பிரச்சினைகளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியடச்கரிடமும் அதிகாரிகளிடமும் முன் வைத்தனர்.
0 Comments:
Post a Comment