29 Apr 2022

கணினி பயிற்சி வகுப்பு ஆரம்பம்.

SHARE

கணினி பயிற்சி வகுப்பு ஆரம்பம்.

மட்டக்களப்பிலிருந்து இயங்கி வரும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளை  ஏற்பாட்டில் மனிதநேய நிதியத்தின் அணுசரனையில் அமரர் கலாநிதி.சுதன் சுதர்சன் அவர்களின் நினைவாக சுமதி சுதர்சன், ஷோனா சுதர்சன் & நீலன் சுதர்சன் (ஐக்கிய அமெரிக்கா)

ஆகியோரின் நிதியுதவியில் கணினி பயிற்சி வகுப்பு  சாரதா நிலைய தலைவர் பேரின்பநாயகம் தலைமையில் வியாழக்கிழமை (28)  ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிலுள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கணினி பயிற்சிகள் வழங்குவதற்கான கணினி மற்றும் தளபாடங்கள் வழங்கப்பட்டது.  

மனிதநேய நிதியத்தின் தலைவர் திருமதி.அபிராமி கைலாசபிள்ளை, அமெரிக்க கிளை பொருளாளர் கை.அரவிந்தன் மற்றும் விவேகானந்த  அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி உயர் கற்கைக்கான ஆலோசகர் வி.கஜேந்திரன், அன்னை ஸ்ரீ சாரதா நிலைய முகாமையாளர் திருமதி.ஜ.ஜனனி மற்றும் நிலையத்தின் நிருவாக உறுப்பினர்கள்,  ஆசிரியர்கள், மற்றும் பயிற்சி பெறவிருக்கும் மாணவிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கணினி பற்றிய அறிவு இல்லாத நிலையில் உள்ள இம் மாணவிகளுக்கு இந் பயிற்சியின் மூலமாக தற்போதைய தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ற வகையில் இந்த மாணவிகளும் தங்களை தயார்படுத்தி கொள்வார்கள். 













SHARE

Author: verified_user

0 Comments: