மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து ஒருவர் படுகாயம்.
மட்டக்களப்பு கல்முனைபிரதான வீதியின் செட்டிபாளயத்தில் செவ்வாய்கிழமை (19) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோட்டர் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது. விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் இஸ்த்தலத்திற்கு விரைந்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment