12 Oct 2021

கொக்கட்டிச்சோலையில் இளம் பெண் மரணம்.

SHARE

கொக்கட்டிச்சோலையில் இளம் பெண் மரணம்.

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை 9 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய கணபதிப்பிள்ளை அனித்தா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்த அவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் யாரும் இல்லாதபோது கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமை சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தைப் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிசாருக்கு உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




SHARE

Author: verified_user

0 Comments: