மக்கள் மத்தியில் நடமாடிய கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பொலிசாரால் கைது.
கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருந்த
நபரொருவர் தனிமைப் படுத்தல் சட்டத்தை மீறி மக்கள் மத்தியில் நடமாடியபோது பொலிஸ் மற்றும்
சுகாதார அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) காலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றதாக
கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியரான குறித்த நபர் சனிக்கிழமை பீ சீ ஆர் பரிசோதனை மூலம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப் படுத்தப்படடிருந்தார்.
தனிமைப்படுத்தலை உதாசீனம் செய்து ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி
பரிவிற்குட்பட்ட பொதுச் சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு மக்கள் மத்தியில்
நடமாடியபோதே பொலிசாரும் சுகாதார அதிகாரிகளும் கைது செய்தனர்.
கைதான தொற்றாளர் கரடியனாறு கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு நோய்காவு வண்டி மூலம்
மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
0 Comments:
Post a Comment