பங்குத் தந்தையர்களை வரவேற்கும் வழியனுப்பும் நிகழ்வு.
புதிதாக நியமனம் பெற்றுள்ள பங்குத் தந்தையரை வரவேற்பதும் மாற்றலாகிச் செல்லும் பங்குத் தந்தையரை வழியனுப்புவதுமான நிகழ்வு மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை 28.03.2021 இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடி டச்பார் இன்னாசியார் ஆலய பங்குத்தந்தையாக பணியாற்றி இறுதி உருவாக்கல் பயிற்சிக்காக செல்லும் எம்.எஸ் ரொஷான் அடிகளாரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வும் புதிய பங்குத்தந்தை
லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வும் இன்னாசியார் ஆலயத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின்
மட்டக்களப்பு கல்லடி டச்பார் இன்னாசியார் ஆலயத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பங்குத்தந்தையாக பணியாற்றிய ரொஷான் அடிகளார் அவரது சேவைக் காலத்தில் இந்த ஆலயத்திற்கு பல அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டார் என்று வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
பங்கு மக்களின் ஏற்பாட்டில் விசேட திருப்பலியும் அடிகளாரை கௌரவிக்கும்
வகையில் நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அதேவேளை ஆலயப் பணிக்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதிய பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வும் நடந்தேறியது.
இந்நிகழ்வுகளில் அடிகளார் கன்னியாஸ்திரிகள் பங்கு மக்கள் பக்தி சபையினர் மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment