10 Feb 2021

பேருந்து சாரதியாக மாறிய பிள்ளையான் எம்.பி.

SHARE

பேருந்து சாரதியாக மாறிய பிள்ளையான் எம்.பி.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) நிகழ்வு ஒன்றுக்காக திங்கட்கிழமை(08) சென்று கொண்டிருக்கும்போது வீதியில் பயணிகளுடன் ஒரு போரூந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை அதானித்துள்ளார்.

அவ்விடத்தின் அவர் சென்ற வாகனத்தை நிறுத்தி என்ன ஏன் போரூந்து போகவில்லை என விசாரித்திருக்கின்றார்.

அதற்கு போரூந்து சாரதி வீதி மிக மோசமாக உள்ளதனால் செல்ல முடியவில்லை. போரூந்தில் இருப்பவர்கள் அரச ஊழியர்கள் அவர்கள் வேலைக்கு செல்லவேண்டும், என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

உங்களை பாதுகாப்பாக உரிய இடத்திற்கு நான் கொண்டு செல்கின்றேன் என தெரிவித்த நாடாளுனம்ற உறுப்பினர் அந்த பேரூந்தின் சாரதியாக மாறி அவர்களை உரிய இடத்திற்கு பத்திரமாக கொண்டு சென்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் இச்செயற்பாடு ஒரு முன்மாதிரியானது என அப்பேரூந்தில் பயணித்தவர்களும், இத்தகவலையறிந்த ஏனையோரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். 








SHARE

Author: verified_user

0 Comments: