மட்டக்களப்பு நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொவிட் தொற்று உறுதி.
மட்டக்களப்பில் தற்போது நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வர்த்தக நிலையங்களில் பணிபுரிபவர்களுக்கு பரிசோதனைகள் இடம்பெற்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு நகரில் காணப்படும் அனைத்து வர்த்தக நிலையங்களில் பணிபுரிபர்களுக்கும் ரபிட் அன்டிஜன் பரிசோதனை காந்தி பூங்காவில் நடைபெற்றது.
இதுவரை 553 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவுகளில் 26 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்படடுள்ளதோடு அவர்கள் பணிபுரியும் 17 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment